×

வீட்டின் கதவை உடைத்து 23 சவரன் நகை கொள்ளை: ஓட்டேரியில் பரபரப்பு

பெரம்பூர்: வீட்டின் கதவை உடைத்து 23 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஓட்டேரி கொசப்பேட்டை சச்சிதானந்தம் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (37). இவர் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கார்த்திகா. இவர் புளியந்தோப்பில் உள்ள அங்கன்வாடியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். நேற்று மாலை சக்திவேல், தனது 2 குழந்தைகளையும் டியூஷனுக்கு அழைத்துச் சென்றார்.

இதன்பின்னர் கார்த்திகா வீட்டை பூட்டிவிட்டு புரசைவாக்கம் பகுதியில் உள்ள டெய்லர் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்துகிடப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள இரண்டு பீரோக்களும் உடைக்கப்பட்டு செயின், மோதிரம் உள்பட 23 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சக்திவேல் வந்து பார்த்தார். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில், ஓட்டேரி போலீசார் வழக்குபதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டின் கதவு, பீரோவில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post வீட்டின் கதவை உடைத்து 23 சவரன் நகை கொள்ளை: ஓட்டேரியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Perampur ,Chennai ,Otteri Kozapatti ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு